20190412 102053

இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை மேம்படுத்தும் நோக்குடன் 12.04.2019 அன்று அராலி கிழக்கு வீரபத்திரர் சனசமூகநிலையத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகள், தமக்குரிய தகைமை, ஆற்றல் மற்றும் ஆர்வத்திற்கேற்ப பொருத்தமான தொழில் துறையை இனங்காண்பதற்கான தேர்வு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள், உள ஆற்றுப்படுத்தல் சேவைகள் என்பன இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தினை யாழ் மாவட்டச் செயலக மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் சங்கானைப் பிரதேச செயலக மனிதவள உத்தியோகத்தரும் இணைந்து மேற்கொண்டனர். இதில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

20190412 123052 
 20190412 105041
 20190412 123758

 

DSC02809

சிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பயனாளிகளுக்காக நடைமுறைப்படும் மனித உடலுக்கு தீங்கற்ற விதத்தில் இயற்கையான உரம் மற்றும் இயற்கையான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடும் சமுர்த்திப் பயனாளிகளினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்கனவே நடாத்தப்பட்ட விழிப்புணர்வுத் திட்டத்தினைத் தொடர்ந்து சங்கானைப் பிரதேசசெயலகப் பிரிவில் உள்ள 25 கிராம அலுவலர் பிரிவிலும் வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளில் சிறப்பாக மேற்கொள்ளும் ஒவ்வொருவர் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 5000 ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் சங்கானைப் பிரதேச செயலக பிரிவு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிக்குத் தலா ரூபா 20,000 ரூபா 15,000 ரூபா 10,000 பெறுமதியான காசோலைகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பிரதேச செயலக பிரிவில் உள்ள சிறப்பாக வீட்டுத் தோட்டத்தினை மேற்கொள்ளும் இளம் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கான காசோலைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இவ்நிகழ்வில் மதிப்பிற்குரிய பிரதேசசெயலாளர் திருமதி.பொ.பிரேமினி அவர்கள் குறிப்பிடுகையில் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் அவர்களின் பல்வேறு செயற்திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இச்செயற்திட்டமானது ஆரம்பத்தில் சமுர்த்தி வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் கட்டம் கட்டமாக இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக, அவ்வீட்டுத் தோட்டத்தினை எவ்வாறு அப்பயனாளிகள் மேற்கொள்கின்றனர் என்பதை உத்தியோகத்தர்கள் பரிசீலித்து சிறந்தபயனாளிகள் இவ்ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது வரட்சியான காலம் எனினும் நீரைச் சேமித்து பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தினைச் சிறந்தமுறையில் மேற்கொண்டு சிறந்தவிளைவுகளைப் பெற்று அதனூடாக மேலதிக வருமானத்தினைப் பெற்று பயனடையவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இயற்கையான உரப்பாவனையுடன் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட களைநாசினிகளைப் பயன்படுத்துவது இவ்வீட்டுத்தோட்டப் போட்டியின் முக்கிய அம்சமாகும்.

இச்சமுர்த்திப் பயனாளிகளுக்காக நடாத்தப்படும் சிறந்த பயனாளிகளை கிராம , பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்றது போல் மாவட்ட , மாகாண தேசியமட்டங்களிலும் இவ்வாறான போட்டிகள் நடாத்தப்படவுள்ளமையும் அதில் தெரிவு செய்யப்படுவோருக்கு பெறுமதியானதொகை காசோலைகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

போதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப் பிரதேசசெயலகத்தில்; 03.04.2019 அன்றுபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் காலை 8.30 மணியளவில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி பொ.பிரேமினி அவர்களால் தேசியகொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கானைப் பிரதேசசெயலகத்தைச் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும்; கலந்துகொண்டு போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவோம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அத்தோடு போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் விழிப்புணர்வு தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்கள் உரையற்றினார்.

.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019

2019 ஆம் வருடத்திற்கான வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவானது  30.03.2019 ஆந்திகதி சனிக்கிழமை ஆகிய இன்று பி.ப 2.00 மணியளவில் யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

இவ்விழாவுக்கு மதிப்பிற்குரிய வலிமேற்கு பிரதேச செயலாளர் திருமதி.பொ.பிரேமினி அவர்கள் தலைமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுனர் அவர்களின் செயலாளரும் முன்னாள் வலிமேற்கு பிரதேச செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக யா/விக்ரோறியாக் கல்லூரி அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்களும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க.விஜிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.. அத்துடன் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை கட்டிட நிர்மாணப் பொறியியல் விற்பன்னரும் விளையாட்டு ஆர்வலருமாகிய திரு.சின்னத்தம்பி இராஜேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

இவ்விளையாட்டுவிழாவில் கழகங்களுக்கிடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய விளையாட்டு வீரவீராங்கனைகளுக்கான வெற்றிச்சின்னங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்காக கேடயங்களும் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் மற்றும் விருந்தினர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் வரவேற்புரை உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.கி.செந்தூரன் அவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தனது தலைமையுரையில்,

பிரதேச மட்ட கழகங்கள் தமது ஒழுக்கங்களைச் சிறந்த முறையில் பேணி சமுகப் பொறுப்புள்ளவர்களாக செயற்படுதல் வேண்டுமெனவும் ஏனைய கல்விச் செயற்பாடுகளிலும் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் மாவட்ட , மாகாண , தேசிய போட்டிகளில் வெற்றிகளைப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.கஜிதரன் அவர்கள் குறிப்பிடுகையில் அதிக வெப்பம் இருக்கும் இக்காலத்தில் கூட இவ்வீரவீராங்கனைகள் விளையாட்டில்  ஆர்வமாக செயற்பட்டதாகவும் இவ்விளையாட்டு விழாவானது உரிய காலத்தில் சிறப்பாக நடாத்தி முடித்திருப்பதையிட்டு நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் மாவட்ட , மாகாண , தேசிய , சர்வதேச மட்டப் போட்டிகளில் சாதனை படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் நேர்சிந்தனையுடன் கல்வித்துறையிலே அக்கறை காட்டும் அதேவேளை விளையாட்டுத்துறையிலும் அதிக அக்கறை காட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இவ்விளையாட்டு விழாவில் பங்களித்த யாவருக்கும் எமது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.செ.ரம்மியராகுலன் அவர்களின் நன்றி பாராட்டுதலுடன் இனிது நிறைவுற்றது.

News & Events

10
අගෝ2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
අගෝ2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
අගෝ2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
අගෝ2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ජූලි2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ජූලි2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ජූනි2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

Scroll To Top