அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026
அரச அதிபர் வெற்றி கிண்ணபோட்டித் தொடரில் கரப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ந்து சாதனை படைக்கும் சங்கானை பிரதேச செயலக அணியினர்.
நேற்று சனிக்கிழமை (04.07.2026), வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 இறுதி நிகழ்வில் நடைபெற்றது.
இப் போட்டியில் சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி கரப்பந்தாட்டம்,முதலாம் இடத்தையும் கலப்பு வலைப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
15 பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலகத்துடனான தரப்படுத்தலில் 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது
அரச அதிபர் வெற்றி கிண்ண போட்டிகள் தொடங்கியது முதல் 10 தடவைகள் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டிகளில் களம் இறங்கிய வலிகாமம் மேற்கு பிரதேச செயலக அணி 8 தடவைகள் அரச அதிபர் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இதற்காக தமது திறமைகளை வெளிப்படுத்தி வரும் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனிவரும் காலங்களிலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.