“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலர் பிரிவில் பொது மக்களின் சிறப்பான பங்களிப்புடன் இடம் பெற்றது.
இந்த தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று சனிக்கிழமை (8.8.2026)வட்டு வடக்கு J/158 கிராம அலுவலர் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ S.ஶ்ரீபவானந்தராஜா அவர்கள் கலந்து கொண்டு இந்த திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.
இதேவேளை சம நேரத்தில் மற்றைய 25 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் வீதிகள் ,குளங்கள் ,வாய்க்கால்கள் ,பாடசாலைகள் முன்பள்ளிகள் ,பொது மண்டபங்கள்,உட்பட பல இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் ,நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பினை வழங்கினர்.
"அத்தம " தேசிய வேலை திட்டத்தில் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி இலக்கியா ஜெயகரன் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது,