சமுர்த்தி நடவடிக்கைகள்
அறிமுகம்:-
அரசாங்கத்தால் பல்வேறுபட்ட வறுமை ஒழிப்பு திட்டங்கள் தனிப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் சமுர்த்தியும் வறுமை ஒழிப்பு திட்டங்களில் ஒன்றாகும்.
சமுர்த்தி திட்டமானது மூன்று பெரும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறையில் உள்ளடக்கியுள்ளது. அவையாவன,
வங்கி நடைமுறைகள்
சமுர்த்தி உலர் உணவு நிகழ்ச்சி திட்டம்
கருத்திட்டம் (உட்கட்டுமானம், வாழ்வாதாரம்) என்பனவாகும்.
சங்கானை பிரதேச செயலகத்தில் 8244 குடும்பங்கள் சமுர்த்தி சிறு குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனர். 5 பேர் கொண்ட 8 - 10 க்கும் இடைப்பட்ட சிறுகுழுக்களைச் சேர்த்து சங்கங்கள் கிராமசேவகள் பிரிவு தோறும் உருவாக்கப்பட்டுள்ளன.
வங்கி நடவடிக்கைகள்:-
சங்கானைப் பிரதேச செயலகத்தில் இரண்டு வங்கிகள் உருவாக்கப்பட்டு இவ் வங்கிகள் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் மேன்முதலீட்டுக்குரிய நடவடிக்கைகளில் வங்கிச்சங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதில் வட்டுக்கோட்டை சமுதாய அடிப்படையில் வங்கியில் J/ 157 - J/168 வரையான கிராம உத்தியோகத்தர்கள் பிரிவும் வடக்கம்பரை சமுதாய அடிப்படையில் வங்கியில் J/169 - J/181 வரையான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன.
சமுர்த்தி உலர் உணவு:-
சமுர்த்தியின் மற்றைய பிரதான நடவடிக்கையாக உலர் உணவு விநியோகம் உள்ளது. இதில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 3, 637 குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இவ் முத்திரையின் பெறுமதிகளாக 1500/=, 2500/=, 3500/= உள்ளன. இதில் உள்ளடங்கப்படுகின்ற குடும்பங்களுக்கு சமூகபாதுகாப்பு உரிமைகளும் உண்டு. அதாவது ஒரு நபரின் குடும்ப அங்கத்தவரின் பிறப்பு, இறப்பு, திருமணம், நோய் இவற்றிக்கு கொடுப்பனவாக
பிறப்பு:- 7500/=
இறப்பு:- 15000/=
திருமணம்:- 7500/=
நோய்:- 5 நாட்களும் அதற்க்கு மேலும் வைத்தியசாலையில் இருந்தால் ஆகக் கூடிய தொகையாக 7500/= வரை வழங்கப்படும்.
சமுர்த்தி புலமைப்பரிசில் திட்டம்:-
சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களில் க.பொ.த.சா. தரப்பரீட்சையில் (கணிதம் உட்பட) சித்தியடைந்து உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் 1500/= படி 24 மாதங்களுக்கு உயர்தரப் பரீட்சை எடுக்கும் வரை பண உதவி வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.














