குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் விபரங்கள்
|
- குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் பெயர் : திருமதி.பொ.பிரேமினி
- பதவி : பிரதேச செயலாளர்
- தொலைபேசி இலக்கம் : +94 21 225 0044
- பக்ஸ் இலக்கம் : +94 21 225 0063
- ஈமெயில் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல் உத்தியோகத்தரின் விபரங்கள்
![]() |
- தகவல் உத்தியோகத்தரின் பெயர் : திருமதி.கி.செந்தூரன்
- பதவி : உதவி பிரதேச செயலாளர்
- தொலைபேசி இலக்கம் : +94 21 225 1225
- பக்ஸ் இலக்கம் : +94 21 225 0063
- ஈமெயில் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
-
தகவலைப் பெறுவதற்கான படிவங்கள் 
| தகவலுக்கான உரிமை தொடர்பான இணையத்தளம் |
பொதுமக்கள் அரச நிறுவனங்களில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையினை 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச்சட்டம் வழங்குகின்றது.
குடியரசுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமானதெனும் எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் நிதியிலிருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களிடம் காணப்படல் வேண்டுமென்பது அடிப்படையான எண்ணக்கரு ஆகும்.
இந்த உரிமையை சிறந்த முறையில் பேணிப் பாதுகாப்பதற்கு மூவகையான அடிப்படைத் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
- தகவல்களுக்கு அணுகுதல்
இதன் மூலம் கருதப்படுவது யாதெனில் மக்களுக்குத் தேவையான தகவல்களை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கான ஆற்றல் ஆகும். தகவல்களின் கிடைப்பனவு மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் ஊடகங்கள் தடையின்றி சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படலே இதன் கருத்து ஆகும். விசேடமாக வெகுஜன ஊடகங்கள் தணிக்கை அல்லது தடையின்றி சுதந்திரமாகவும் தலையீடுகள் அற்ற விதமாகவும் செயற்பட வேண்டுமென்ற விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.
- தகவல்களை வெளிப்படுத்துதல் தொடர்பில் அரச நிறுவனங்களின் பொறுப்பு
மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய இலகுவான ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வழங்குவதற்கான பொறுப்பு அரச நிறுவனங்களிடம் காணப்படல் வேண்டும். மக்களுக்கு கிடைப்பனவாகவுள்ள ஊடகங்களினூடாக மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியவாறு ஏற்புடைய தகவல்களை வழங்குதல் அரசின் பொறுப்பு ஆகும்.
- தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கான பொறுப்பு
குறித்த நபர்கள் தொடர்பான தகவல்கள் கோரப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த அத்தகவல்களை வழங்குவதற்கான கடப்பாட்டினை இது குறிக்கின்றது. அரச இரகசியங்கள் போன்ற தகவல்களை ஒருசில வரையறைகளுக்கு உட்பட்டு அரச நிறுவனங்களிலிருந்து கோருவதற்கான உரிமை மக்களிடம் காணப்படல் வேண்டும். மக்களுக்கு ஏற்புடைய தனிப்பட்ட ரீதியான தகவல்களையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களையும் மக்களுக்கு வழங்கும் பொறுப்பினை அரச அலுவலர்கள் கொண்டுள்ளனர். இத்தகவல்களை தாமதமின்றி சரியானவாறு பெற்றுக்கொள்ளல் மக்களது உரிமை ஆகும்.
மேலும் தகவலுக்கான உரிமை தொடர்பான மேலதிக தகவல்களையும், தகவல்களைப் பெறுவதற்கான படிவங்களையும் மும்மொழிகளிலும் www.rti.gov.lk என்னும் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்.















