மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள செய்தி.
இப்பிரதேசத்தில் இருக்கும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினையும் அவற்றிற்கு அவசியமான தராதரங்களைப் பெறுவதற்கான தகவல்களையும் வழங்கும் பிரிவாக சங்கானைப் பிரதேச செயலகத்தில் உள்ள மனிதவலு வேலைவாய்ப்பு பிரிவு வசதியளிக்கின்றது.
- பொறுப்பான உத்தியோகத்தர் : திருமதி.குபேந்தினி சசிதரன்.
- பதவி : மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்.
- தொலைபேசி இல: 0771508299
இப்பிரிவின் பிரதான செயற்பாடுகள்
- பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல்
- வேலையற்ற இளைஞர் யுவதிகளைப் பதிவு செய்தலும் சுயதொழில் ஒன்றை மேற்கொள்வதற்கான ஊக்குவித்தலும்
- சுயதொழில் செய்வோருக்கு மேலதிகமான பயிற்சிகளை வழங்குதல்
- வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தல்.
வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவதற்கு www.dome.gov.lk என்னும் இணையத்தள முகவரிக்குச் சென்று தங்கள் விபரங்களை வழங்குவதன் மூலம் தங்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு வசதிகள் பற்றிய பூரண விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.














