சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்திப் பிரிவினர், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவியுடன் நடாத்தப்பட்ட விற்பனை கண்காட்சி நிகழ்வு 07.03.2022 அன்று மு.ப 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வானது எமது பிரதேச செயலாளர் திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெண் சிறுதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டதோடு, "கண்ணியம் மிக்க பெண்ணியத்தை போற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் வீதி நாடகமும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் பதிவுகள் சில...





















