வலி.மேற்கு பிரதேச
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
வலி. மேற்கு பிரதேச செயலர் பிரிவின் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று புதன்கிழமை (17.06.2026) பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமானது.
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான டாக்டர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா அவர்கள் தலைமை தாங்கினார் .
ஆரம்பத்தில் பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தியதுடன் இந்த கூட்டத்தில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் குறித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீபவானந்தராஜா இக்கூட்டத்தை தலைமை தாங்கி தொடர்ந்து நடாத்தினார்.
கடந்த கூட்ட அறிக்கை சமர்க்கப்பட்
டது.நடப்பு விவகாரங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திதிட்டங்கள் தொடர்பான நீண்ட சமர்ப்பணம் ஒன்றை பிரதேச செயலக உதவித்திட்ட பணிப்பாளர் திருமதி இலக்கியா ஜெயகரன் அவர்கள் வழங்கினார்.
அதன்போது கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
பொன்னாலை தொடக்கம் மாதகல் வரையான வயல்வெளிகள் மற்றும் தோட்டப்பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் தொல்லைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் விவசாயம் பயிர்கள் அழிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இவ்விடயம் தொடர்பாக மாவட்டம் மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்படி விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பில்
கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் உட்பட பிரதேச செயலக பதவி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டமானது பிற்பகல் 5.30 மணியளவில் நிறைவு பெற்றது.