வலிகாமம் மேற்குச் சங்கானைப் பிரதேச செயலகத்தின் புதுவருட நிகழ்வும் 2026 ஆம் ஆண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் அரச சேவை சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும்
பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு செயலகம் முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் சத்தியபிரமாணம் எடுக்க நிகழ்வு இடம்பெற்றது .
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட புத்தாண்டு கேக் வெட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
உத்தியோகத்தர்களுக்கு விசேட மாக சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது.அத்துடன் இவ்வாண்டுக்கான நாட் குறிப்பேடும் வெளியிடப்பட்டது.
அனைவரும் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்று தங்கள் கடமைகளை இனிதே இன்று ஆரம்பித்தனர்.