சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய தொழில்முயற்சி அதிகார சபையின் (NEDA) ஏற்பாட்டில் தொழில்முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கு தடையாக காணப்படும் காரணிகளுக்கு தீர்வு காணும் முகமாக 29.11.2023 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் தொழில்முயற்சியாளர் மன்றமானது நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர், வங்கி முகாமையாளர்கள், NEDA மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழல்முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகள் பல தீர்வு காணப்பட்டதுடன் தீர்க்க முடியாத பிரச்சினைகள் மாவட்ட தொழில் முயற்சியாளர் மன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.
















