
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தில், "பெண்களின் திறமைகளை வலுவூட்டுவதன் ஊடாக சமூகத்தில் பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி பெருமைக்குரியவர்களாக உருவாக்குதல்" எனும் தொனிப்பொருளில் தேவை நாடும் மகளிர் அமைப்பு (WIN), இதம் நிறுவனம், உலக தரிசன நிறுவனம் (World Vision) மற்றும் சமூக மாற்றத்துக்கான போராட்ட இயக்கம் ஆகியோரின் அனுசரணையுடன் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினரால் நடாத்தப்பட்ட மகளிர் தின நிகழ்வு 24.03.2023 அன்று மு.ப 9.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வானது எமது பிரதேச செயலாளர் திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.














