
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு (04.02.2022) 8.19 மணிக்கு எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திர தினத்தினை முன்னிட்டு பிரதேச சுற்றுப்புறச் சூழலில் மரங்கள் நாட்டப்பட்டதுடன், எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.


















