இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் கிளீன் சிறீலங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து அரசசேவையின் நெறிமுறை விழுமியங்களை வலுப்படுத்துவதற்காக தேசிய நேர்மை வாரம் நிகழ்ச்சித்திட்டம் ஜூலை 27- ஜூலை 31 நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கி நெறிமுறை விழுமியங்கள் மற்றும் கொள்கை ரீதியான தரங்களுடன் ஒன்றிணைந்து யாரும் பார்க்காத போதும் எந்தவொரு மேற்பார்வையும் இல்லாதபோதும் தனக்குத்தானே சுய கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளும் கனிவான சேவையினை வழங்கும் உத்தியோகத்தர்களை உருவாக்கும் பின்னணியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இன்றைய தினம் (27.07.2026) காலை 8.50 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் நேர்மை வாரத்தினை பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களால் ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி இலக்கியா ஜெயகரன்,நிர்வாக கிராம அலுவலர் k.கணேசலிங்கம்,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இ.ரவிராஜ் ஆகியோர் நேர்மை வாரம் தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.
இன்றைய நாள் நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள். இதன் கருப்பொருள் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" ஆகும்.
மேலும் உத்தியோகத்தர்களின் நலன்கருதி நேர்மை வார மூலையும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.