
இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை மேம்படுத்தும் நோக்குடன் 12.04.2019 அன்று அராலி கிழக்கு வீரபத்திரர் சனசமூகநிலையத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகள், தமக்குரிய தகைமை, ஆற்றல் மற்றும் ஆர்வத்திற்கேற்ப பொருத்தமான தொழில் துறையை இனங்காண்பதற்கான தேர்வு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள், உள ஆற்றுப்படுத்தல் சேவைகள் என்பன இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தினை யாழ் மாவட்டச் செயலக மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் சங்கானைப் பிரதேச செயலக மனிதவள உத்தியோகத்தரும் இணைந்து மேற்கொண்டனர். இதில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
|
![]() |
![]() |
















