
யாழ் மாவட்டபதிவாளர் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.04.2019 அன்று இடம்பெற்றது. இதனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.செந்தூரன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். இதற்கு வடக்கு மாகாண மாவட்ட உதவி பதிவாளர் நாயகம் அவர்களும் மேலதிக மாவட்டபதிவாளர்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் பதிவகக்கிளை உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர். இதில் இதுவரையும் பிறப்பினை பதிவு செய்யாத 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிறப்புச்சான்றிதழ் பதியப்பட்டு 38 பேருக்கு பிறப்பு சான்றுதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் இதுவரை திருமணப் பதிவு மேற்கொள்ளாத 8 பேருக்கும் திருமணப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.














