வலி.மேற்கு பிரதேச செயலகமும், உலக தரிசன நிறுவனத்தின் (World Vision) மதிநிலை மகளிர் திட்டமும் இணைந்து நடத்திய "சர்வதேச மகளிர் தின விழா - 2026" வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
“அவளின் போஷாக்கும் ஆரோக்கியமும் அவசியம்" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.
வலி ,மேற்கு சங்கானை பிரதேச செயலாளர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களும், உலக தரிசன நிறுவனத்தின் பாலின சமத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆலோசகர் சவினி ஸ்ரீகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண கமல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திருமதி. தெய்வநாயகி பிரணவன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சங்கானை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. பிரணவசொரூபி சிவகரன் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. இலக்கியா ஜெயகரன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சித் திட்டம்
விழாவானது, "அவளின் போஷாக்கும் ஆரோக்கியமும் அவசியம்" என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வுப் பேரணியுடன் ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து கண்காட்சி மற்றும் விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
மங்கல விளக்கேற்றல் மற்றும் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து, தலைமையுரை மற்றும் வரவேற்புரைகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, பெண்களின் போஷாக்கு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கருத்துப் பகிர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
மேலும், குழு நடனம், மகளிர் தின பிரகடனம் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
குறிப்பாக, யாழ்ப்பாணம் தோழமை நிறுவனத்தினால் “பாலினத் தடைகளை உடைத்து பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல்" எனும் தலைப்பிலான நாடகம் விழாவிற்கு மேலும் வலு சேர்த்தது.இறுதியாக நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது,