இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறிப் பாடசாலையில் கடந்த 15.12.2023 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மாலை 03.00 மணிக்கு சுழிபுரம் மேற்கு ஜயனார் ஆலய மண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் குருபூசை நிகழ்வு இந்துசமய கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு த.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இந்துசமய கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அஜிதா கோபிநாத் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இளம் சைவப்புலவர் திரு ச.நவநீதன் அவர்களின் சொற்பொழிவும் அந்நிகழ்விலே வினாக்கள் கேட்கப்பட்டு விடையளித்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிக்கப்பட்டதுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பேச்சு, கவிதை, நடனம் போன்ற கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.















