சங்கானை பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி நிகழ்வானது இம்மாதம் 21 ம் திகதி எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கணக்காளரின் தலைமையில் இடம்பெற்றது.
கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து, 18 வயதின் கீழ் நீர் நிரப்புதல், 18 வயதின் மேல் நீர் நிரப்புதல் , 18 வயதின் மேல் பொது அறிவுப் போட்டி, செயற்கைக் கால் உடையவர்களுக்கான சங்கீத கதிரை மற்றும் விழிப்புலன் அற்றோருக்கான முட்டி உடைத்தல் போன்ற விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் பதிவுகள் சில...
















