UNDP நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் CFCD நிறுவனத்தினால் வலி மேற்கு சங்கானை பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் 'நிலைபேறான மீள்குடியேற்றம், மீள் ஒருங்கிணைவிற்கான விரிவாக்கப்பட்ட ஆதரவு' எனும் திட்டத்தின் கீழ் மீள் குடியமர்ந்தவர்களிற்கான வாழ்வாதாரம் வழங்கும் திட்டத்தில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு 15.11.2023 அன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச செயலாளர், பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், UNDP, CFCD ஆகிய நிறுனங்களின் திட்ட இணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்¸ பிரதேச செயலக தன்னார்வ நிறுவனங்களின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்¸ பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
















