சங்கானை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைத்தொழிலாளர்களுக்கு சந்தைப்படுத்தல் வசதியினை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக வலிகாமம் மேற்கு பிரதேச செயலக கைத்தொழில் பிரிவினால் 2023.11.02 மற்றும் 2023.11.03 ஆகிய இரு தினங்களும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் விற்பனைக்கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டது. இங்கு குறிப்பாக பாரம்பரிய உணவு மற்றும் ஏனைய உள்ளுர் உற்பத்திப் பொருட்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கொள்வனவு செய்து பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.


















