சங்கானை பிரதேச செயலகத்தின் வருடாந்த பனை மர நடுகைத்திட்டமானது 2023.10.31 அன்று சுழிபுரம் மேற்கு (J/172), பொன்னாலை (J/170), மூளாய் (J/171) கிராமங்களில் இடம்பெற்றதுடன் இத் திட்டத்தின் கீழ் 5000 பனை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.அன்றைய தினம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி பிரதேசத்தில் 350 தென்னங்கன்றுகள் மற்றும் 50 நிழல் தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் புதிதாக தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் தனது முதலாவது களப்பயணத்தினை மேற்கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் கிளையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இக் கிராம சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்திகழ்வின் பதிவுகள் சில...




















